தேவகுமாரன் ஜேசு கிறிஸ்து இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைபெறச் செய்வார்
சமாதானத் தூதுவர் ஜேசு கிறிஸ்து, இவ்வுலகில் மனிதனாக புனித மரியாள் என்ற மானிடகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, மக்களின் பாவத்தை தானே ஏற்றுக்கொண்டு, அதற்காக தனது புனித இரத்தத்தை சிந்திநார்.
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில் புடுங்குவது போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய வார்த்தைகளாலும், ஏசி உங்களை விரக்த்தியின் விழிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே இல்லையே! நான் சொல்வதை யாரும் கேட்கவில்லையே , எல்லோரும் எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த மனிதனையும் விரக்த்தியின் விளிம்புக்கு கொண்டு போகிறது.
நண்பனே உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது உயிரையே உனக்காகக் கொடுத்த ஜேசு என்ற ஒருவர் இருக்கிறார்.
.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்'' என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு மிதியடியும், அணியுங்கள் கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து விருந்து கொண்டாடுவோம்
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும் உயிர் பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான். மிண்டும் கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம் 22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து கொள்வார் .
No comments:
Post a Comment